அப்பா எனக்கு உபநயனம் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த நாள்களில் இனாயத்துல்லாவுக்கு அவன் வீட்டில் சுன்னத் கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். சரியாக ஒரு மாதம். அவன் வீட்டில் விசேஷம் வந்துவிட்டது. எங்கள் வீட்டில் ஒரு மூன்று வருடங்கள் தள்ளிப்போட்டு, குரோம்பேட்டைக்குக் குடிவந்த பிறகுதான் அதைச் செய்தார்கள். இனாயத்துல்லா திகிலும் பரவசமுமாகத் தனக்கு நடக்கப்போகிற விஷயம் பற்றி என்னிடம் நிறைய சொன்னான். காரணம் மட்டும் எனக்கு அப்போது புரியவில்லை. அவனுக்கும் சரியாக விளக்கத் தெரியவில்லை. வலிக்காதாடா? வலிக்காதாடா? … Continue reading சுகம் பிரம்மாஸ்மி – 2
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed